google logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logo

Tuesday, November 19, 2013

அதிகாரம் 118 : கண்விதுப்பழிதல்


மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து. [118:10]

விளக்கக் குறள் :
முரசாய்ப் பறைசாற்றும் கண்ணிருந்து செய்தி
அறிந்துகொள்வ(து) ஊரார்க்(கு) எளிது

Wednesday, November 13, 2013

அதிகாரம் 51 : தெரிந்து தெளிதல்


பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல் [51:05]

விளக்கக் குறள் :
பெருமை சிறுமையின் தன்மையைக் காட்டும்
உரைக்கல்லாம் செய்யும் செயல்

Tuesday, November 12, 2013

அதிகாரம் 50 : இடனறிதல்


சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும் [50:08]


விளக்கக் குறள் :
சிறுபடை என்றாலும் ஏற்றஇடம் வாய்த்தால்
பெரும்படையை வீழ்த்தி விடும்

Friday, February 8, 2013

அதிகாரம் 046 : சிற்றினம் சேராமை




நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு
[46:02]

விளக்கக் குறள் :

சேர்ந்த நிலத்தின் தரம்காட்டும் நீர்;அதுபோல்
சார்ந்தஇனம் காட்டும் அறிவு

Monday, January 7, 2013

அதிகாரம் 095 : மருந்து


நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல். [95:08]



விளக்கக் குறள் :
குறிப்புணர்ந்து காரணம் ஆராய்ந்து தீர்க்கும்
முறையறிந்து செய்தல் சிறப்பு

Friday, September 28, 2012

அதிகாரம் 112 : நலம் புனைந்துரைத்தல்


மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன். [112:06]

விளக்கக் குறள் :

நிறைமதியும் பெண்முகமும் மாற்றம் அறியா(து)
உறைவிடத் துள்குழம்பும் மீன்

Monday, June 18, 2012

அதிகாரம் 018 : வெஃகாமை [ பிறன்பொருள்மேல் ஆசை கொள்ளாமை ]


நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும் [18:01]

விளக்கக் குறள் :
நேர்மையின்றி மாற்றான் பொருள்கவரப் பார்ப்போர்
குடிகெட்டுக் குற்றம் வரும்

Thursday, June 14, 2012

அதிகாரம் 06: வாழ்க்கைத்துணை நலம்

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை [06:03]


விளக்கக் குறள் :
மனைவியின் நற்பண்பால் வாழ்க்கை சிறக்கும்;
அமையா(து) அவளின்றி வாழ்வு

Thursday, February 16, 2012

அதிகாரம் : 131: புலவி [ காதலரின் ஊடல் ]

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல். [131:03]
விளக்கக் குறள் :
வாடல்தான் கூட்டிவிடும்; கூடாமல் ஓடிவிடும்
ஊடலுற்ற அன்பர் செயல்
வெறுத்தோரைச் சேராமல் போவது; துன்புற்(று)
இருப்போரைத் துன்புறுத்தல் போன்று
ஊடல்தான் கொண்டோரை மென்மேலும் துன்புறுத்தும்
கூடாமல் விட்டு விடல்

Wednesday, January 18, 2012

அதிகாரம் : 16 பொறைஉடைமை [ பொறுமை ]

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும் [16:04]

விளக்கக் குறள் :
பொறுமையை நீங்காமல் போற்றி இருப்போர்ப்
பெருமையைப் போற்றும் உலகு

Friday, December 23, 2011

அதிகாரம் 078 : படைச் செருக்கு [படையின் பெருமை]

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும். [78:04]


விளக்கக் குறள் :

கைவேலால் யானையைக் கொன்றபின்பும் காத்திருப்பான்
மார்தைத்த வேலைப் பறித்து

கையிருந்த வேல்யானை வீழ்த்த; தொடரத்தன்
மார்தைத்த வேல்பறிப் பான்

Tuesday, December 20, 2011

அதிகாரம் 012 : நடுவு நிலைமை [ பொதுத் தன்மை ]

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி [12:08]


விளக்கக் குறள் :
ஒருபக்கம் சாயாத் தராசின்முள் போல
இருப்பது சான்றோர்க்(கு) அழகு

தராசின் நியாயமுள் போல்நடுவில் சாயாமல்
நிற்பது சான்றோர்க்(கு) அழகு


படவிளக்கம் :

நடைமுறையில் நடு நிலையைக் காப்பாற்றும் சான்றோர் நிலைமை

Saturday, December 17, 2011

அதிகாரம் 055 : செங்கோன்மை [ அரச நீதி ]

குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்

வடுவன்று வேந்தன் தொழில் [55:09]

விளக்கக் குறள் :

மக்களைக் காப்பதும் குற்றம் அழிப்பதும்

மன்னன் கடமையா கும்

ஒரு முன்னோட்டம் :
இரு துண்டுகளாக வெட்டப்பட்டுக் கிடப்பது 'ஈ'

கொண்ட குறிக்கோளில் வெறியாய் இருப்பவரால மட்டுமே ..எளிதில் பறந்து விடும் ஒரு சிறு ஈயையும் குறிவைத்து இருதுண்டுகளாய் /சரிசமமாய் வெட்டமுடியும் ... அவன்தான் வித்தையில் தேர்ந்த மன்னனாக இருக்கமுடியும்

பட விளக்கம் :
மக்களுக்கு ஊறுவிளைவிக்கும் எதையும் (அது ஈயாக இருந்தாலும்) கொன்றொழித்து மக்களைக் காப்பது மன்னன் கடமையாகும்

...சரியாச் சொல்லி இருக்கேனா ?

Sunday, December 11, 2011

அதிகாரம் :5 இல்வாழ்க்கை

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும் [05:10]

விளக்கக் குறள் :

மண்ணுலகில் நன்நெறியில் வாழ்வோரை; விண்ணுலகத்

தெய்வமாய்ப் போற்றிமதிப் பார்

Thursday, December 8, 2011

அதிகாரம் 111 : புணர்ச்சி மகிழ்தல் [ கூடல் இன்பம் ]

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை

போழப் படாஅ முயக்கு. [111:08]

விளக்கக் குறள் :

காற்றும் இடைபுகா வண்ணம் தழுவுவது

காதலருக்(கு) என்றும் இனிது

Tuesday, December 6, 2011

அதிகாரம் 07 : மக்கட்ப் பேறு

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த

மக்கட்பேறு அல்ல பிற [07:01]

விளக்கக் குறள் :

பெறத்தகுந்த பேற்றில் அறிவுடைய மக்கள்போல்

மற்றெதுவும் நாம்அறி யோம்


Sunday, December 4, 2011

அதிகாரம் 047 : தெரிந்து செயல்வகை [ஆராய்ந்து செயல்முடித்தல்]

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு

அரும்பொருள் யாதொன்றும் இல் [47:02]

விளக்கக் குறள் :

செயல்தெரிந்தார் கூடி செயல்ஆய்ந்து செய்வாருக்(கு)

ஆகா செயலொன்றும் இல்


அதிகாரம் 091 : பெண்வழிச் சேறல் [ பெண் பித்தராதல் ]

பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்

பெண்ணே பெருமை உடைத்து. [91:07]

விளக்கக் குறள் :

பெண்ணேவல் செய்துநிற்கும் ஆண்மையிலும்; நாணம்கொள்

பெண்மையே என்றும் சிறப்பு


Saturday, December 3, 2011

அதிகாரம் 093 : கள் உண்ணாமை

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்

கட்காதல் கொண்டொழுகு வார். [93:01]

விளக்கக் குறள் :

புகழ்விலகும்; கொண்ட பகையும் இகழும்

மதுவின்மேல் காதலுற்றோ ரை


படவிளக்கம் :

வரிசையாய் வருபவர்களின் ஒழுங்கு... மதுக்கோப்பையைக் கடந்தவுடன் கலைகிறது...வரிசை குலைகிறது

Thursday, December 1, 2011

அதிகாரம் 07 : மக்கட்ப் பேறு :..

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின் [07:02]

விளக்கக் குறள் :

பழியில்லாப் பண்புடைய மக்களைப் பெற்றால்

எழுபிறப்பும் அண்டாது தீது