google logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logo

Wednesday, November 30, 2011

அதிகாரம் 114 : நாணுத் துறவுரைத்தல் [ நாணம் மீறுவதைக் கூறல் ]

நோனா உடம்பும் உயிரும் மடலேறும்

நாணினை நீக்கி நிறுத்து [114:02]

1)

நான்எனது உள்ளம் அழுக்காக; ’நாள்நோக்கி’

நாணம் தொலைத்தேன் துணிந்து



2)அழுக்கடைந்த(து) உள்ளம் உடம்பு; தொழுகிறேன்

நானும்என் நாணம் தொலைத்து


3)

அழுக்கடைந்த(து) உள்ளம் உடம்பு; மடலேற

நாணம் தொலைத்தேன் துணிந்து

Tuesday, November 29, 2011

அதிகாரம் 088 : பகைத்திறன் தெரிதல்


வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்

பகைவர்கண் பட்ட செருக்கு. [88:08]


விளக்கக் குறள் :

வழியறிந்து தன்வலியால் தற்காப்போர் முன்னால்

அழியும் பகையின் திமிர்

Sunday, November 27, 2011

அதிகாரம் 010 : இனியவை கூறல்

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்(து) அற்று [10:10]

விளக்கக் குறள் :

இன்சொல் விடுத்துக் கடும்சொல்லால் சாடல்;

கனிதவிர்த்துக் காய்சுவைத்தாற் போன்று ...........(அ)


கூடுதல் விளக்கம் :)

இனிமேல் எதனால் கலகம்; அதனால்
இனிமையாய்ப் பேசிப் பழகு ................................(ஆ)


Thursday, November 24, 2011

அதிகாரம் 111 : புணர்ச்சி மகிழ்தல் [ கூடல் இன்பம் ]

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு

அமிழ்தின் இயன்றன தோள். [111:06]

விளக்கக் குறள் :

தழுவும் பொழுதெல்லாம் புத்துயிர் தந்திடும்;

நல்லமுதாம் என்னவள் தோள்


Monday, November 21, 2011

அதிகாரம் 04 : அறன் வலியுறுத்தல்

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை. [04:06]

விளக்கக் குறள் :

இயன்ற வரைஅன்றே செய்அறம்; நிற்கும்

உயிர்நீத்த பின்பும் புகழ் .(அ)


அயர்வின்றி அன்றே அறம்செய்; அதுவே

உயிர்நீக்கும் காலத் துணை .(ஆ)


Friday, November 18, 2011

அதிகாரம் : 131: புலவி [ காதலரின் ஊடல் ]

புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்

அல்லல்நோய் காண்கம் சிறிது. .[131:01]

விளக்கக் குறள் :

தழுவா(து) இருஅவரை நீயும்; அவர்பெறும்

அல்லல்நோய் காண்போம் சிறிது

Thursday, November 17, 2011

அதிகாரம் 045 : பெரியாரைத் துணைகோடல்[பெரியாரின் துணையைக் கொள்]


அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

திறனறிந்து தேர்ந்து கொளல் [45:01]


விளக்கக் குறள் :

அறமுணர்ந்த மூதறிஞர் நட்பை; அடையும்

முறையறிந்து சேர்தல் சிறப்பு


Thursday, November 3, 2011

அதிகாரம் 022 : ஒப்புரவு அறிதல் [ பொதுநலம் நாடல் ]

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

பேரறி வாளன் திரு [22:05]

விளக்கக் குறள் :

பேரறிவா ளன்செல்வம்; தாகம் தணிக்கநல்

நீர்தரும் ஊருணியை போன்று