Friday, December 23, 2011
அதிகாரம் 078 : படைச் செருக்கு [படையின் பெருமை]
மெய்வேல் பறியா நகும். [78:04]
விளக்கக் குறள் :
கைவேலால் யானையைக் கொன்றபின்பும் காத்திருப்பான்
மார்தைத்த வேலைப் பறித்து
கையிருந்த வேல்யானை வீழ்த்த; தொடரத்தன்
மார்தைத்த வேல்பறிப் பான்
Tuesday, December 20, 2011
அதிகாரம் 012 : நடுவு நிலைமை [ பொதுத் தன்மை ]
Saturday, December 17, 2011
அதிகாரம் 055 : செங்கோன்மை [ அரச நீதி ]
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில் [55:09]
விளக்கக் குறள் :
மக்களைக் காப்பதும் குற்றம் அழிப்பதும்
மன்னன் கடமையா கும்
Sunday, December 11, 2011
அதிகாரம் :5 இல்வாழ்க்கை
Thursday, December 8, 2011
அதிகாரம் 111 : புணர்ச்சி மகிழ்தல் [ கூடல் இன்பம் ]
Tuesday, December 6, 2011
அதிகாரம் 07 : மக்கட்ப் பேறு
Sunday, December 4, 2011
அதிகாரம் 047 : தெரிந்து செயல்வகை [ஆராய்ந்து செயல்முடித்தல்]
அதிகாரம் 091 : பெண்வழிச் சேறல் [ பெண் பித்தராதல் ]
Saturday, December 3, 2011
அதிகாரம் 093 : கள் உண்ணாமை
Thursday, December 1, 2011
அதிகாரம் 07 : மக்கட்ப் பேறு :..
Wednesday, November 30, 2011
அதிகாரம் 114 : நாணுத் துறவுரைத்தல் [ நாணம் மீறுவதைக் கூறல் ]
Tuesday, November 29, 2011
அதிகாரம் 088 : பகைத்திறன் தெரிதல்
Sunday, November 27, 2011
அதிகாரம் 010 : இனியவை கூறல்
Thursday, November 24, 2011
அதிகாரம் 111 : புணர்ச்சி மகிழ்தல் [ கூடல் இன்பம் ]
Monday, November 21, 2011
அதிகாரம் 04 : அறன் வலியுறுத்தல்
Friday, November 18, 2011
அதிகாரம் : 131: புலவி [ காதலரின் ஊடல் ]
புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது. .[131:01]
விளக்கக் குறள் :
தழுவா(து) இருஅவரை நீயும்; அவர்பெறும்
அல்லல்நோய் காண்போம் சிறிது
Thursday, November 17, 2011
அதிகாரம் 045 : பெரியாரைத் துணைகோடல்[பெரியாரின் துணையைக் கொள்]
Thursday, November 3, 2011
அதிகாரம் 022 : ஒப்புரவு அறிதல் [ பொதுநலம் நாடல் ]
Friday, October 28, 2011
அதிகாரம் :15 பிறன்இல் விழையாமை
Wednesday, October 26, 2011
அதிகாரம் 110 : குறிப்பறிதல்
Saturday, October 22, 2011
அதிகாரம் 067 : வினைத் திட்பம் [ செயல் வலிமை ]
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை [67:09]
விளக்கக் குறள் :
துன்பமென் றாலும் விடாது தொடர்ந்தாருக்(கு)
இன்பம் தரும்அச் செயல்
இன்பம் தரும்செயல் என்பதெல்லாம் துன்பம்
விதைத்த நிகழ்வின் நிறைவு
Friday, October 21, 2011
அதிகாரம் 068 : வினைச் செயல்வகை [செயல் வகைகள் ]
அதிகாரம் 031 : வெகுளாமை[சினம் கொள்ளாமை]
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற
விளக்கக் குறள் :
வலியோர்முன் கொள்கோபம் தீது; எளியோர்முன்
கொள்கோபம் முன்னிலும் தீது
படவிளக்கம் :
ஐயன் சொன்ன கோணம் இதுவல்ல ..உன்னிலும் எளியவரிடம் கோபம் கொள்ளாதே ..அது தீயது என்றார் ..
ஆனால் அவர்சொல் கேளாமல் கோபப்பட்டு... இதுபோல ஒன்று நிகழ்ந்துவிட்டால் ..
கோபப்பட்டவரின் வாழ்வில்.....அதைவிடக் கேவலமான ஒன்று இருக்கப்போவதில்லை ...:)
எனவே கவனம் :))
Sunday, October 16, 2011
அதிகாரம் 110 : குறிப்பறிதல்
அதிகாரம் 102 : நாணுடைமை
பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.
விளக்கக் குறள் :
நாணும் செயலுக்கு நாணா(து) இருப்போரை
நீங்கும் அறம்நாணம் கொண்டு
Wednesday, October 12, 2011
அதிகாரம் 126 : நிறையழிதல் [ மனம் குலைதல் ]
காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.
விளக்கக் குறள் :
காமமென்னும் ஆயுதத்தால் வீழும்; பெருமைஎன்னும்
நாணத்தாழ் போட்ட கதவு
Tuesday, October 11, 2011
அதிகாரம் 084 : பேதைமை [ அறியாமை ]
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.
விளக்கக் குறள் :
கற்றும் உணர்ந்தும் பிறர்க்குரைத்தும்; கற்றவழி
செல்லாதார் மூடருக்கும் மேல்
Monday, October 10, 2011
அதிகாரம் 052 : தெரிந்து வினையாடல் [ தெரிந்து செயல்புரிதல்]
Saturday, October 8, 2011
அதிகாரம் 110 : குறிப்பறிதல்
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண். [109:06]
விளக்கக் குறள் :
சினத்தால் அவள்புருவம் கோணாமல் நின்றிருந்தால்
நான்நடுங்கும் துன்பம்வா ராது
அதிகாரம் 045 : பெரியாரைத் துணைகோடல்[பெரியாரின் துணையைக் கொள்]
Tuesday, October 4, 2011
அதிகாரம் 040 : கல்வி
கலைமகளுக்கு சமர்ப்பணம் :
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
விளக்கக் குறள் :
கற்க குறையின்றி நல்மொழியை; கற்றபின்
அவ்வழியில் காக்க நெறி
படவிளக்கம் :
Monday, October 3, 2011
அதிகாரம் 011 : செய்ந்நன்றியறிதல்
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது
விளக்கக் குறள் :
சரியான நேரத்தில் செய்யும் சிறுஉதவி;
இவ்வுலகைத் தாண்டிப் பெரிது
சமயத்தில் செய்யுதவி சின்னஞ் சிறிதெனினும்
பேருலகைக் காட்டிலும் மேல்
Sunday, October 2, 2011
அதிகாரம் 112 : நலம் புனைந்துரைத்தல்
அதிகாரம் 064 : அமைச்சு
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை
விளக்கக் குறள் :
நுண்மதியும் கற்றறிந்த தன்மதியும் கொண்டோர்முன்
வஞ்சகம் நிற்கமுடி யாது
விதிநுட்பம் கொண்டமதி நுட்பத்தைச் சூழும்
அதிநுட்பம் இல்லையாம் இங்கு