திருக்குறளை கண்கவர் காட்சிகளோடும் விளக்கலாம் என்பதை நிரூபிக்கும் முயற்சி இது. தூத்துக்குடி துரை.ந.உ. வழங்கும் இந்தப் படைப்புகள் மின் தமிழில் வெளியிடப்பட்டு இப்போது தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பூ குழுவில் இணைந்து மலர்கின்றது. கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
Tuesday, November 12, 2013
அதிகாரம் 50 : இடனறிதல்
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும் [50:08]
விளக்கக் குறள் : சிறுபடை என்றாலும் ஏற்றஇடம் வாய்த்தால்
பெரும்படையை வீழ்த்தி விடும்
#ஓரிடத்தில் போய் சேர்வதே வாய்ப்புதானே # இரண்டுக்கும் முடிவில் விடைஒன்றேதான் பொருள் என நினைத்தேன்.. மாற்றி விடுகிறேன் ஐயா .. # நன்கு கவனியுங்கள் ..அம்பு முதுகிலிருந்து துளைத்து கீழ் நோக்கி வெளிவந்திருக்கிறது .. எலி அதன் வளையில் இருந்து எய்தால் இதற்கு வாய்ப்பில்லை .. ஏற்ற இடத்திலிருந்து/ உயரத்திலிருந்து அம்பு வந்திருக்கிறது .. அதுவே சேர்ந்த இடம் ஐயா ...
“சிறுபடை என்றாலும் ஏற்றஇடம் வாய்த்தால்“
ReplyDelete‘வாய்த்தால்‘ என்பது தவறு. ‘சேர்ந்தால்‘ என்பதே சரி.
“பெரும்படையை வீழ்த்தி விடும்“
‘வீழ்த்திவிடும்‘ என்பதும் தவறு. பெரும்படையின் ஊக்கம் ‘அழிந்துவிடும்‘ என்பது சரி.
மேலும் இந்தப் படத்தில் சிறுபடையான் யாரிடமும் சேரவில்லை,
எனவே இந்தக் குறளுக்கு இந்தப் படம் சரியானதாகது என நினைக்கிறேன்.
அன்பன்
கி.காளைராசன்
வாழ்க ஐயா ... தாங்களின் வருகைக்கு மிக நன்றி
ReplyDelete#ஓரிடத்தில் போய் சேர்வதே வாய்ப்புதானே
# இரண்டுக்கும் முடிவில் விடைஒன்றேதான் பொருள் என நினைத்தேன்.. மாற்றி விடுகிறேன் ஐயா ..
# நன்கு கவனியுங்கள் ..அம்பு முதுகிலிருந்து துளைத்து கீழ் நோக்கி வெளிவந்திருக்கிறது .. எலி அதன் வளையில் இருந்து எய்தால் இதற்கு வாய்ப்பில்லை .. ஏற்ற இடத்திலிருந்து/ உயரத்திலிருந்து அம்பு வந்திருக்கிறது .. அதுவே சேர்ந்த இடம் ஐயா ...