google logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logo

Monday, September 19, 2011

அதிகாரம் 01 : கடவுள் வாழ்த்து

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின் [01:02]



விளக்கக் குறள் :
கற்றும் இறைவன் அடித்தொழார்; எல்லாம்
அறிந்தும் அறியா தவர் (அ)
அறிவுவடி(வு) ஆண்டவன் பாதம் தொழாதவர்
கற்றதால் இல்லை பயன் (ஆ)

படம் பற்றிய குறிப்பு : ’அந்த கற்றவர்’ நிற்கும் இடம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று

Friday, September 16, 2011

அதிகாரம் :5 இல்வாழ்க்கை


பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல் [05:04]

விளக்கக் குறள் :
பழிக்(கு)அஞ்சி கூடிப் பகுத்துண்பார் வாழ்வில்
ஒழுக்கத்திற்(கு) இல்லை குறை

Tuesday, September 13, 2011

அதிகாரம் 8 : அன்புடைமை

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு [08:05]




விளக்கக் குறள் :
இன்புற்றார் வாழ்வின் சிறப்புக்கு வாய்ப்பெல்லாம்
அன்புள்ளம் கொண்டு வரும்

அன்பான உள்ளத்தால் வாய்க்கும்; உலகத்தில்
இன்புற்றார் வாழ்வில் சிறப்பு

Monday, September 12, 2011

அதிகாரம் 07 : மக்கட்ப் பேறு

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர் [07:06]



விளக்கக் குறள் :
குழல்யாழ் இனிதாம்; குழந்தை பிதற்றும்
மழலைச்சொல் கேளா தவர்க்கு (அ)
குழலோசை யாழிசை என்றும் இனிதாம்
மழலைச்சொல் கேளாத வர்க்கு (ஆ)

Thursday, September 8, 2011

அதிகாரம் 06: வாழ்க்கைத்துணை நலம்

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை [06:05]




விளக்கக் குறள் :
கணவனை மட்டுமே தெய்வமாய்ப் போற்றுபவள்;
வாழவைக்கும் வான்மழைப் போன்று

படக்குறிப்பு : நடுவில் இருக்கும் அந்த ‘புதிர்’ குறியீடு மிக முக்கியமானதாகப் படுகிறது எனக்கு ...இது மழையும் மனைவியும் ஆழம் அறிய இயலாப் புதிர்தானே :))

Tuesday, September 6, 2011

அதிகாரம் 03 : நீத்தார் பெருமை [துறவின் பெருமை]

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து [03:04]




விளக்கக் குறள் :
உறுதியென்னும் அங்குசத்தால் ஐம்புலனும் காப்போர்
துறவென்னும் ஞாலத்து வித்து

Monday, September 5, 2011

அதிகாரம் 03 : நீத்தார் பெருமை [துறவின் பெருமை]

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு [03:01]




விளக்கக் குறள் :
ஒழுக்கம் சிறந்த துறவின் பெருமையைப்
போற்றிநிற்கும் சான்றோரின் நூல்

Saturday, September 3, 2011

அதிகாரம் - 02 : வான் சிறப்பு

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது [02:06]



விளக்கக் குறள் :

மழைத்துளி வீழாது போனபின் மண்ணிலொரு
புல்நுனியும் காண்ப(து) அரிது