திருக்குறளை கண்கவர் காட்சிகளோடும் விளக்கலாம் என்பதை நிரூபிக்கும் முயற்சி இது. தூத்துக்குடி துரை.ந.உ. வழங்கும் இந்தப் படைப்புகள் மின் தமிழில் வெளியிடப்பட்டு இப்போது தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பூ குழுவில் இணைந்து மலர்கின்றது. கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
Friday, February 8, 2013
அதிகாரம் 046 : சிற்றினம் சேராமை
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு
[46:02]
விளக்கக் குறள் :
சேர்ந்த நிலத்தின் தரம்காட்டும் நீர்;அதுபோல்
சார்ந்தஇனம் காட்டும் அறிவு
அருமையான பணி நண்பரே, இந்தக் காலத்துக்கும் ஏற்ற நம் குறட்பாக்களை, வெண்பா இலக்கணம் மாறாத குறள் வடிவிலேயே விளக்குவதும், குழந்தைகளும் விரும்புமாறு படக்காட்சியைத் தருவதும் மிக அருமை! எனது பாராட்டுகள். (இவ்வளவு அருமையான பணியில் எழுத்துப் பிழையின்றிப் பார்த்துக்கொள்வதும் முக்கியம். செங்கோன்மை அதிகாரப் பெயர் செங்கோண்மை என வந்துள்ளதை அருள்கூர்ந்து கவனித்து மாற்றுங்கள். மேலே தலைப்பு விளக்கமாகத் தரப்பட்டு தரப்பட்டுள்ள வரிகளில், எழுத்துக்கள், கருத்துக்கள் என வந்துள்ள சொற்களை முறையே எழுத்துகள், கருத்துகள் என மாற்றுவதும் அவசியம்) உங்களின் பல்வேறு பணிகளுக்கிடையிலும் இதை விடாமல் செய்யுங்கள். உங்கள் பணி தொடர வாழ்த்துகள். நன்றி வணக்கம். தங்கள் அன்புள்ள, நா.முத்துநிலவன். http://valarumkavithai.blogspot.in/
அருமையான பணி நண்பரே,
ReplyDeleteஇந்தக் காலத்துக்கும் ஏற்ற நம் குறட்பாக்களை, வெண்பா இலக்கணம் மாறாத குறள் வடிவிலேயே விளக்குவதும், குழந்தைகளும் விரும்புமாறு படக்காட்சியைத் தருவதும் மிக அருமை! எனது பாராட்டுகள்.
(இவ்வளவு அருமையான பணியில் எழுத்துப் பிழையின்றிப் பார்த்துக்கொள்வதும் முக்கியம். செங்கோன்மை அதிகாரப் பெயர் செங்கோண்மை என வந்துள்ளதை அருள்கூர்ந்து கவனித்து மாற்றுங்கள். மேலே தலைப்பு விளக்கமாகத் தரப்பட்டு தரப்பட்டுள்ள வரிகளில், எழுத்துக்கள், கருத்துக்கள் என வந்துள்ள சொற்களை முறையே எழுத்துகள், கருத்துகள் என மாற்றுவதும் அவசியம்) உங்களின் பல்வேறு பணிகளுக்கிடையிலும் இதை விடாமல் செய்யுங்கள். உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.
நன்றி வணக்கம்.
தங்கள் அன்புள்ள,
நா.முத்துநிலவன்.
http://valarumkavithai.blogspot.in/