
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி
எளியதென்(று) எண்ணிப் பிறன்இல் நுழைவோர்;
அழியாப் பழியடை வார்
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.
விளக்கக் குறள் :
பார்த்தாள்;நான் பார்த்ததும் நாணித் தலைகுனிந்து
வார்த்தாள்;எம் காதலுக்கு நீர்
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை [67:09]
விளக்கக் குறள் :
துன்பமென் றாலும் விடாது தொடர்ந்தாருக்(கு)
இன்பம் தரும்அச் செயல்
இன்பம் தரும்செயல் என்பதெல்லாம் துன்பம்
விதைத்த நிகழ்வின் நிறைவு
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற
விளக்கக் குறள் :
வலியோர்முன் கொள்கோபம் தீது; எளியோர்முன்
கொள்கோபம் முன்னிலும் தீது
படவிளக்கம் :
ஐயன் சொன்ன கோணம் இதுவல்ல ..உன்னிலும் எளியவரிடம் கோபம் கொள்ளாதே ..அது தீயது என்றார் ..
ஆனால் அவர்சொல் கேளாமல் கோபப்பட்டு... இதுபோல ஒன்று நிகழ்ந்துவிட்டால் ..
கோபப்பட்டவரின் வாழ்வில்.....அதைவிடக் கேவலமான ஒன்று இருக்கப்போவதில்லை ...:)
எனவே கவனம் :))
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
விளக்கக் குறள் :
1)
மையுண்ட கண்ணின் ஒருபார்வை நோய்தரும்;
மற்றதந்த நோய்க்கு மருந்து
2)
சீர்கெடுக்கும் மையிட்ட கண்ஒன்று: சீக்கெடுத்துச்
சீராக்கும் மற்றது வந்து
பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.
விளக்கக் குறள் :
நாணும் செயலுக்கு நாணா(து) இருப்போரை
நீங்கும் அறம்நாணம் கொண்டு
காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.
விளக்கக் குறள் :
காமமென்னும் ஆயுதத்தால் வீழும்; பெருமைஎன்னும்
நாணத்தாழ் போட்ட கதவு
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.
விளக்கக் குறள் :
கற்றும் உணர்ந்தும் பிறர்க்குரைத்தும்; கற்றவழி
செல்லாதார் மூடருக்கும் மேல்
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண். [109:06]
விளக்கக் குறள் :
சினத்தால் அவள்புருவம் கோணாமல் நின்றிருந்தால்
நான்நடுங்கும் துன்பம்வா ராது
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
விளக்கக் குறள் :
கற்க குறையின்றி நல்மொழியை; கற்றபின்
அவ்வழியில் காக்க நெறி
படவிளக்கம் :
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது
விளக்கக் குறள் :
சரியான நேரத்தில் செய்யும் சிறுஉதவி;
இவ்வுலகைத் தாண்டிப் பெரிது
சமயத்தில் செய்யுதவி சின்னஞ் சிறிதெனினும்
பேருலகைக் காட்டிலும் மேல்
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை
விளக்கக் குறள் :
நுண்மதியும் கற்றறிந்த தன்மதியும் கொண்டோர்முன்
வஞ்சகம் நிற்கமுடி யாது
விதிநுட்பம் கொண்டமதி நுட்பத்தைச் சூழும்
அதிநுட்பம் இல்லையாம் இங்கு
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்
விளக்கக் குறள் :
நுனிமரம் நோக்கித் தொடரும் முடிவு;
உயிருக்குச் சேர்க்கும் அழிவு
கிளைநுனி ஏறியபின் மேலும் தொடர்ந்தால்
தலைக்குத் தொடராது வாழ்வு
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல் [29:05]
விளக்கக் குறள் :
பொருள்கவர எண்ணி பிறர்தளரக் காப்போர்;
அருள்மீது பற்றற்ற வர்