மெய்வேல் பறியா நகும். [78:04]

விளக்கக் குறள் :
கைவேலால் யானையைக் கொன்றபின்பும் காத்திருப்பான்
மார்தைத்த வேலைப் பறித்து
கையிருந்த வேல்யானை வீழ்த்த; தொடரத்தன்
மார்தைத்த வேல்பறிப் பான்
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில் [55:09]
விளக்கக் குறள் :
மக்களைக் காப்பதும் குற்றம் அழிப்பதும்
மன்னன் கடமையா கும்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் [05:10]
விளக்கக் குறள் :
மண்ணுலகில் நன்நெறியில் வாழ்வோரை; விண்ணுலகத்
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
விளக்கக் குறள் :
பெறத்தகுந்த பேற்றில் அறிவுடைய மக்கள்போல்
மற்றெதுவும் நாம்அறி யோம்
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார். [93:01]
விளக்கக் குறள் :
புகழ்விலகும்; கொண்ட பகையும் இகழும்
மதுவின்மேல் காதலுற்றோ ரை
படவிளக்கம் :
வரிசையாய் வருபவர்களின் ஒழுங்கு... மதுக்கோப்பையைக் கடந்தவுடன் கலைகிறது...வரிசை குலைகிறதுஎழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின் [07:02]
விளக்கக் குறள் :
பழியில்லாப் பண்புடைய மக்களைப் பெற்றால்
எழுபிறப்பும் அண்டாது தீது
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்(து) அற்று [10:10]
விளக்கக் குறள் :
இன்சொல் விடுத்துக் கடும்சொல்லால் சாடல்;
கனிதவிர்த்துக் காய்சுவைத்தாற் போன்று ...........(அ)
கூடுதல் விளக்கம் :)
இனிமேல் எதனால் கலகம்; அதனால்
இனிமையாய்ப் பேசிப் பழகு ................................(ஆ)
புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது. .[131:01]
விளக்கக் குறள் :
தழுவா(து) இருஅவரை நீயும்; அவர்பெறும்
அல்லல்நோய் காண்போம் சிறிது
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு
விளக்கக் குறள் :
பேரறிவா ளன்செல்வம்; தாகம் தணிக்கநல்
நீர்தரும் ஊருணியை போன்று
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.
விளக்கக் குறள் :
பார்த்தாள்;நான் பார்த்ததும் நாணித் தலைகுனிந்து
வார்த்தாள்;எம் காதலுக்கு நீர்
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை [67:09]
விளக்கக் குறள் :
துன்பமென் றாலும் விடாது தொடர்ந்தாருக்(கு)
இன்பம் தரும்அச் செயல்
இன்பம் தரும்செயல் என்பதெல்லாம் துன்பம்
விதைத்த நிகழ்வின் நிறைவு
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற
விளக்கக் குறள் :
வலியோர்முன் கொள்கோபம் தீது; எளியோர்முன்
கொள்கோபம் முன்னிலும் தீது
படவிளக்கம் :
ஐயன் சொன்ன கோணம் இதுவல்ல ..உன்னிலும் எளியவரிடம் கோபம் கொள்ளாதே ..அது தீயது என்றார் ..
ஆனால் அவர்சொல் கேளாமல் கோபப்பட்டு... இதுபோல ஒன்று நிகழ்ந்துவிட்டால் ..
கோபப்பட்டவரின் வாழ்வில்.....அதைவிடக் கேவலமான ஒன்று இருக்கப்போவதில்லை ...:)
எனவே கவனம் :))
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
விளக்கக் குறள் :
1)
மையுண்ட கண்ணின் ஒருபார்வை நோய்தரும்;
மற்றதந்த நோய்க்கு மருந்து
2)
சீர்கெடுக்கும் மையிட்ட கண்ஒன்று: சீக்கெடுத்துச்
சீராக்கும் மற்றது வந்து
பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.
விளக்கக் குறள் :
நாணும் செயலுக்கு நாணா(து) இருப்போரை
நீங்கும் அறம்நாணம் கொண்டு
காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.
விளக்கக் குறள் :
காமமென்னும் ஆயுதத்தால் வீழும்; பெருமைஎன்னும்
நாணத்தாழ் போட்ட கதவு
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.
விளக்கக் குறள் :
கற்றும் உணர்ந்தும் பிறர்க்குரைத்தும்; கற்றவழி
செல்லாதார் மூடருக்கும் மேல்
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண். [109:06]
விளக்கக் குறள் :
சினத்தால் அவள்புருவம் கோணாமல் நின்றிருந்தால்
நான்நடுங்கும் துன்பம்வா ராது
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
விளக்கக் குறள் :
கற்க குறையின்றி நல்மொழியை; கற்றபின்
அவ்வழியில் காக்க நெறி
படவிளக்கம் :
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது
விளக்கக் குறள் :
சரியான நேரத்தில் செய்யும் சிறுஉதவி;
இவ்வுலகைத் தாண்டிப் பெரிது
சமயத்தில் செய்யுதவி சின்னஞ் சிறிதெனினும்
பேருலகைக் காட்டிலும் மேல்
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை
விளக்கக் குறள் :
நுண்மதியும் கற்றறிந்த தன்மதியும் கொண்டோர்முன்
வஞ்சகம் நிற்கமுடி யாது
விதிநுட்பம் கொண்டமதி நுட்பத்தைச் சூழும்
அதிநுட்பம் இல்லையாம் இங்கு
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்
விளக்கக் குறள் :
நுனிமரம் நோக்கித் தொடரும் முடிவு;
உயிருக்குச் சேர்க்கும் அழிவு
கிளைநுனி ஏறியபின் மேலும் தொடர்ந்தால்
தலைக்குத் தொடராது வாழ்வு