google logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logo

Friday, October 28, 2011

அதிகாரம் :15 பிறன்இல் விழையாமை


எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்

விளியாது நிற்கும் பழி [15:05]


விளக்கக் குறள் :

எளியதென்(று) எண்ணிப் பிறன்இல் நுழைவோர்;

அழியாப் பழியடை வார்


பட விளக்கம் :
:)

Wednesday, October 26, 2011

அதிகாரம் 110 : குறிப்பறிதல்


நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்

யாப்பினுள் அட்டிய நீர். [110:03]


விளக்கக் குறள் :

பார்த்தாள்;நான் பார்த்ததும் நாணித் தலைகுனிந்து

வார்த்தாள்;எம் காதலுக்கு நீர்

Saturday, October 22, 2011

அதிகாரம் 067 : வினைத் திட்பம் [ செயல் வலிமை ]



துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி

இன்பம் பயக்கும் வினை [67:09]

விளக்கக் குறள் :

துன்பமென் றாலும் விடாது தொடர்ந்தாருக்(கு)

இன்பம் தரும்அச் செயல்


இன்பம் தரும்செயல் என்பதெல்லாம் துன்பம்

விதைத்த நிகழ்வின் நிறைவு


பட விளக்கம் : வேண்டுமோ :)

Friday, October 21, 2011

அதிகாரம் 068 : வினைச் செயல்வகை [செயல் வகைகள் ]


சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு

தாழ்ச்சியுள் தங்குதல் தீது [68:01]


விளக்கக் குறள் :

செயல்தன்மை ஆய்ந்து முடிவெடுத்த பின்பும்

செயல்படுத்தத் தாமதித்தல் தீது

அதிகாரம் 031 : வெகுளாமை[சினம் கொள்ளாமை]


செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்

இல்அதனின் தீய பிற [31:02]


விளக்கக் குறள் :

வலியோர்முன் கொள்கோபம் தீது; எளியோர்முன்

கொள்கோபம் முன்னிலும் தீது


படவிளக்கம் :

ஐயன் சொன்ன கோணம் இதுவல்ல ..உன்னிலும் எளியவரிடம் கோபம் கொள்ளாதே ..அது தீயது என்றார் ..

ஆனால் அவர்சொல் கேளாமல் கோபப்பட்டு... இதுபோல ஒன்று நிகழ்ந்துவிட்டால் ..

கோபப்பட்டவரின் வாழ்வில்.....அதைவிடக் கேவலமான ஒன்று இருக்கப்போவதில்லை ...:)

எனவே கவனம் :))

Sunday, October 16, 2011

அதிகாரம் 110 : குறிப்பறிதல்

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு

நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. [110:01]


விளக்கக் குறள் :

1)

மையுண்ட கண்ணின் ஒருபார்வை நோய்தரும்;

மற்றதந்த நோய்க்கு மருந்து

2)

சீர்கெடுக்கும் மையிட்ட கண்ஒன்று: சீக்கெடுத்துச்

சீராக்கும் மற்றது வந்து

அதிகாரம் 102 : நாணுடைமை


பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்

அறம்நாணத் தக்கது உடைத்து. [102:08]


விளக்கக் குறள் :

நாணும் செயலுக்கு நாணா(து) இருப்போரை

நீங்கும் அறம்நாணம் கொண்டு

Wednesday, October 12, 2011

அதிகாரம் 126 : நிறையழிதல் [ மனம் குலைதல் ]


காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்

நாணுத்தாழ் வீழ்த்த கதவு. [126:01]


விளக்கக் குறள் :

காமமென்னும் ஆயுதத்தால் வீழும்; பெருமைஎன்னும்

நாணத்தாழ் போட்ட கதவு


படவிளக்கம் :
பொங்கும் காமம் எனது வெட்கத்தை அழிக்க ...பெருமை குலையும் வகையில் ....எல்லாரும் அறியும் பொருட்டு.... ’யாரும் இடைஞ்சல் செய்யாதீர்கள்’ என்று பொதுவில் அறிவித்து , வேறு யாரும் அழைத்தாலும்,வேறெதற்கும் நான் தயாரில்லை (காது அடைக்கப்பட்டிருக்கிறது ), என முடிவெடுத்து , உள்ளே காத்திருக்கிறேன் நான் :)

Tuesday, October 11, 2011

அதிகாரம் 084 : பேதைமை [ அறியாமை ]


ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்

பேதையின் பேதையார் இல். [84:04]


விளக்கக் குறள் :

கற்றும் உணர்ந்தும் பிறர்க்குரைத்தும்; கற்றவழி

செல்லாதார் மூடருக்கும் மேல்

Monday, October 10, 2011

அதிகாரம் 052 : தெரிந்து வினையாடல் [ தெரிந்து செயல்புரிதல்]




வினைக்குரிமை நாடிய பின்றை அவனை

அதற்குரியன் ஆகச் செயல் [52:08]


விளக்கக் குறள் :

செயல்முடிக்கும் ஆற்றல் அறிந்து; செயல்தொடங்கச்

செய்துவிடல் சேர்க்கும் சிறப்பு

Saturday, October 8, 2011

அதிகாரம் 110 : குறிப்பறிதல்


கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்

செய்யல மன்இவள் கண். [109:06]



விளக்கக் குறள் :

சினத்தால் அவள்புருவம் கோணாமல் நின்றிருந்தால்

நான்நடுங்கும் துன்பம்வா ராது


அவள்கண் = அவளிடம் என்ற பொருளில் மேலே விளக்கம் தந்திருந்தேன்..
கண்ணை கண்ணாக வைத்தே ஒரு விளக்கம்


வளையா(து) அவள்புருவம் கண்மறைத்து நின்றால்
விளையா(து) எனக்குள் பயம்

அதிகாரம் 045 : பெரியாரைத் துணைகோடல்[பெரியாரின் துணையைக் கொள்]


01-10 11 : முதியோர் தினம் : மூத்தோரைப் போற்றும் உறுதி எடுப்போம்

அதிகாரம் 045 : பெரியாரைத் துணைகோடல்[பெரியாரின் துணையைக் கொள்]

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்

பேணித் தமராக் கொளல் [45:03]


விளக்கக் குறள் :

பெரியோரைப் போற்றி உறவாக்கிக் கொள்ளல்

அரியவற்றுள் எல்லாம் அரிது

Tuesday, October 4, 2011

அதிகாரம் 040 : கல்வி


கலைமகளுக்கு சமர்ப்பணம் :



கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக [40:01]


விளக்கக் குறள் :

கற்க குறையின்றி நல்மொழியை; கற்றபின்

அவ்வழியில் காக்க நெறி


படவிளக்கம் :

படிப்பதனால் கிடைக்கும் பறவைப் பார்வையால் ...
உலகை எளிதாய் பார்க்கலாம்....
நல்வழியை நன்றாய் காக்கலாம்

Monday, October 3, 2011

அதிகாரம் 011 : செய்ந்நன்றியறிதல்


காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது [11:02]



விளக்கக் குறள் :

சரியான நேரத்தில் செய்யும் சிறுஉதவி;

இவ்வுலகைத் தாண்டிப் பெரிது


சமயத்தில் செய்யுதவி சின்னஞ் சிறிதெனினும்

பேருலகைக் காட்டிலும் மேல்


படவிளக்கம் :
இங்கே உதவுபவர் ஒரு மாற்றுத் திறனாளி ..
இவரது செயல் , ஐயனே நினைத்திராத புதிய கோணமாக இருக்க வாய்ப்புண்டு ...

Sunday, October 2, 2011

அதிகாரம் 112 : நலம் புனைந்துரைத்தல்


காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்

மாணிழை கண்ணொவ்வேம் என்று. [112:04]


விளக்கக் குறள் :

பார்க்கும் குவளை; கவிழ்ந்தே நிலம்நோக்கும்

பாவைகண்ணுக்(கு) ஈடில்லை என்று


படவிளக்கம் :வெட்கப்படுகிறது மலர் மனதுக்குள் ...

( இது குவளை மலர் அல்ல )

அதிகாரம் 064 : அமைச்சு


மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்

யாவுள முன்நிற் பவை [64:06]


விளக்கக் குறள் :

நுண்மதியும் கற்றறிந்த தன்மதியும் கொண்டோர்முன்

வஞ்சகம் நிற்கமுடி யாது


விதிநுட்பம் கொண்டமதி நுட்பத்தைச் சூழும்

அதிநுட்பம் இல்லையாம் இங்கு

அதிகாரம் 048 : வலியறிதல் [வலிமை அறிதல்]


நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்

உயிர்க்கிறுதி ஆகி விடும் [48:06]


விளக்கக் குறள் :

நுனிமரம் நோக்கித் தொடரும் முடிவு;

உயிருக்குச் சேர்க்கும் அழிவு


கிளைநுனி ஏறியபின் மேலும் தொடர்ந்தால்

தலைக்குத் தொடராது வாழ்வு

அதிகாரம் 029 : கள்ளாமை [ களவு செய்யாமை]


அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்

பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல் [29:05]


விளக்கக் குறள் :

பொருள்கவர எண்ணி பிறர்தளரக் காப்போர்;

அருள்மீது பற்றற்ற வர்


படவிளக்கம் : தேவை இருக்காது என நினைக்கிறேன்



அதிகாரம் 8 : அன்புடைமை

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு [08:04]



விளக்கக் குறள் :
பிறரின்மேல் ஆர்வம் உருவாக்கி நட்பென்னும்
நற்சிறப்பும் உண்டாக்கும் அன்பு

அதிகாரம் 04 : அறன் வலியுறுத்தல்

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல். [04:03]



விளக்கக் குறள் :
செய்யும் அறச்செயல் ஏதெனினும்; நல்வழியில்
தொய்வின்றிச் செய்வாய் தொடர்ந்து